தென்காசி, ஆகஸ்ட் 03 –
சிமெண்ட் நிறுவனங்களில் ஒன்றான டால்மியா பாரத் சிமெண்ட் நிறுவனம் தங்களது நிறுவனப் பொருட்களை வாங்கும் கட்டிடக் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக 6 மாதத்திற்கு ஒருமுறை அனைத்து மாவட்டங்களிலும் உமாங் உத்சவ் என்னும் மகிழ்ச்சி விழாவை நடத்தி கட்டிட கலைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
இதே போன்று தென்காசி மாவட்டத்தில் டால்மியா பாரத் சிமெண்டை உப யோகப்படுத்தும் கட்டிட பொறியாளர்கள், கான்ட்ராக்டர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோரை கவுரவித்து ஊக்கப்படுத்தி பரிசு பொருட்கள் வழங்கும் விழா தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள எலைக்ட் மஹாலில் வைத்து தென்காசி மாவட்ட உமாங் விழா நடைபெற்றது.
இதில் கட்டிட கலைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் அனைத்து கட்டிடக் கலைஞர்களுக்கும் தாங்கள் உபயோகித்த சிமெண்ட் மூடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் தென் தமிழக விற்பனை பிரிவு பொது மேலாளர் சரவணன் பங்கேற்று கட்டிட கலைஞர்களுக்கும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுக்கும் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடக் கலைஞர்கள், விற்பனை முகவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை டால்மியா பாரத் சிமெண்ட் நிறுவனத்தின் தென்தமிழக பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.



