சுசீந்திரம், ஜூலை 30 –
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் வருடம் தோறும் நல்ல மழை விவசாயம் செழிக்க வேண்டி தாணு மாலைய சுவாமிக்கும் திரு வேங்கட விண்ணவப் பெருமாளுக்கும் ஆடி மாத களப பூஜை நடைபெறுவது வழக்கம் அதுபோல இந்த ஆண்டு ஆடி களபூஜையானது கடந்த 18ஆம் தேதி துவங்கியது தினந்தோறும் சுவாமிக்கு பன்னீர் பால் தயிர் சந்தனம் உட்பட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று வந்தது அதுபோல அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து சுவாமி அம்பாள் வாகனப் பவனி நடைபெற்றது களப பூஜை நிறைவு 13 ஆம் நாளான நேற்று காலை தாணுமாலய சுவாமி கோவில் உட்பிரகாரம் உள்ள விநாயகர் கோவிலுக்கு முன்பு உதய அஸ்தமனவேள்வி பூஜை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் பெரும் அளவு கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்



