சுசீந்திரம், ஜூலை 22 –
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் வெளிநாட்டு பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். வரும் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம், அன்னதானம், ஆஞ்சநேயருக்கு வடை மாலை, நெய் சாத்துதல், மாலை சாத்துதல் போன்றவைகளுக்காக கோவில் நிர்வாகத்தின் மூலம் காணிக்கை செலுத்துவார்கள். அதுபோல கோவில் உண்டியல் வருவாய் போன்ற கணக்குகள் அன்றாடம் கணக்குபதிவேட்டில் வரவு செலவு பதிவு செய்யப்படுவார்கள். இதனை தணிக்கை குழுவினர் வந்து ஆய்வு செய்வார்கள்.
அதன்படி தணிக்கை குழுவினர் சுசீந்திரம் தானுமாலய சுவாமி கோவிலுக்கு வந்து வரவு செலவு கணக்கை தணிக்கை செய்யும்போது அதில் முறைகேடு நடந்திருப்பதாக கோவில் கணக்கர் கண்ணன் மீது புகார் தெரிவித்து மேல் அதிகாரிக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். மேல் அதிகாரிகள் கணக்கரிடம் விசாரணை மேற்கொண்டு அவரை பணி இடை நீக்கம் செய்தனர்


