மார்த்தாண்டம், ஜூலை 20 –
தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் மரிய அஞ்சலி (66). கடந்த 3 வாரங்களுக்கு முன்பு அரசு பஸ்ஸில் பயணம் செய்தார். அப்போது வேர்கிளம்பி அருகே அவரது 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு போனது. இது குறித்து மரிய அஞ்சலி திருவட்டாறு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பஸ் நிறுத்தங்களில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 2 பெண்கள் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை பல்வேறு இடங்களில் போலீசார் தேடி வந்தனர். அப்போது வேர் கிளம்பியில் வைத்து இரண்டு பெண்களையும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மடக்கி பிடித்தார். அதைத் தொடர்ந்து இரண்டு பெண்களிடம் போலீசார் பலகட்டமாக கிடிக்கிப்பிடி விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில் அவர்கள் பொள்ளாச்சி கொடிக்கால் பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி (44), லட்சுமி (40) என்று தெரிய வந்தது. நகையை விற்று பணத்தை செலவு செய்தது விசாரணையில் தெரிந்தது. செலவு செய்தது போக ரெண்டு பேரிடம் மீதி இருந்த பணம் ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்து, தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் ஈஸ்வரி, லட்சுமி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.



