குளச்சல், ஜூலை 20 –
மணவாளக்குறிச்சி அருகே கல்படி, காருபாறை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (63). அதே பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இந்த நிலையில் செல்வராஜ் தனது மொபட் வாகனத்தில் சுபாஷை ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது வெள்ளிமலை என்ற இடத்தில் செல்லும்போது அந்த வழியாக ஈசன்தங்கு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் ராஜா (21) என்பவர் ஓட்டி வந்த பைக், மொபட் மீது மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதை அடுத்து அந்த வழியாக வந்தவர்கள் காயமடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சுபாஷ் மற்றும் ராஜாவுக்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செல்வராஜ் மகன் விஜய ராஜன் (38) என்பவர் அளித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


