வேலூர், ஜூலை 20 –
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த விருப்பாட்சிபுரத்தில் உள்ள விஜயலட்சுமி தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நல சங்க 17ம் ஆண்டு விழா சங்கத் தலைவர் திருஞானம் துணைத் தலைவர்கள் சீனிவாசன், அசோகன், செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் பொருளாளர் நாராயணசாமி, துணைச் செயலாளர்கள் முருகன், முனுசாமி முன்னிலையில் நடைபெற்றது. மேலும் காட்பாடி கிளை தலைவர் விநாயகம், பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆர்.டி.பழனி கலந்து கொண்டு வேலூர் மாவட்ட தச்சு தொழிலாளர் நல சங்கத்தின் 17 வது ஆண்டு விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இதில் தச்சு தொழிலாளர்களின் புதுமனை புகு விழாவிற்கு அன்பளிப்பு, கல்வி உதவித் தொகை, திருமண உதவி தொகை, மஞ்சள் நீராட்டு விழா அன்பளிப்பு விபத்து முதலுதவி தொகை 2000 ரூபாய், உறுப்பினர்களின் வாரிசுகளுக்கான ஈமச்சடங்கிற்கு 2000 ரூபாய் மேலும் புதிதாக சங்கத்தில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.
இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட தச்சு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து உபசரிப்பும் வழங்கப்பட்டது.



