தூத்துக்குடி, ஜூலை 11 –
திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தளவாய்புரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்கள் கைது.
திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சோனியா வழக்கு பதிவு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த தளவாய்புரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் பிரகாஷ் (20), சீருடையார்புரம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (20) மற்றும் ஆறுமுகநேரியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் தினேஷ் (24) ஆகிய 3 நபர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ 400 கிராம் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்.



