தருமபுரி, ஜூலை 0 7 –
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் கேந்திரா தருமபுரி மற்றும் ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் கல்லூரி பென்னாகரம், கடல் புறா இளைஞர் நற்பணி மன்றம் தருமபுரி இணைந்து நடத்திய டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜியின் 125வது பிறந்தநாள் விழா பென்னாகரத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீ அங்காளம்மன் பாரா மெடிக்கல் கல்லூரியின் இயக்குனர் சிலம்பரசன் தலைமை வகித்தார். கடல் புறா இளைஞ நற்பணி மன்றத்தின் தலைவர் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் அங்காளம்மன் பாரா மெடிக்கல் கல்லூரியின் ஆசிரியர்களான கலா, சுதா, கிறிஸ்டினா, சரஸ்வதி மற்றும் அதியமான் டிவியின் இயக்குனர் கபில்தேவ், சமூக ஆர்வலர் நஞ்சப்பன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முன்னதாக சியாமா பிரசாத் முகர்ஜியின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கட்டுரை, ஓவியம், கலை நிகழ்ச்சி போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் மை பாரத் தருமபுரி சார்பில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூய்மை பறிமுகமானது நடத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இறுதியாக மை பாரத் கேந்திராவின் அலுவலக பணியாளர் ரா. முனியப்பன் நன்றி கூறினார்.



