கிருஷ்ணகிரி, ஏப்ரல் 23 –
கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மிட்டஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. பொதுமக்கள் அதிகாலை நேரத்திலிருந்தே வரிசையாக வந்து உற்சாகமாக தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
அத்துடன், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான எல்.சுப்பிரமணி நேற்று காலை வாக்குச்சாவடிக்கு வந்து, முறையான அடையாளச் சரிபார்ப்புக்குப் பிறகு தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசும் பொழுது: தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் வாக்காளரிடம் மிகவும் கவர்ந்துள்ளதாகவும், மேலும் சிறப்பான ஆட்சி செய்து வரும் தமிழக முதல்வர், மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக நீடிப்பார் என்றும், அதற்கு உறுதுணையாக காங்கிரஸ் பேரியக்கத்தின் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் இருப்பார்கள் என தெரிவித்தார்.
மேலும் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லகுமார் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும் தெரிவித்தார். மேலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்து ஜனநாயக விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.



