மார்த்தாண்டம், ஆக. 23 –
திருவட்டார் அருகே வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி அனுஷா (32). இவர்கள் வீட்டின் மாடியில் புதிதாக வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மாடியில் இருந்து வீட்டுக்குள்ளே வர கதவு போடவில்லை. பலகையால் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இன்று சிவகுமார் வேலைக்கு சென்று இருந்தார். வீட்டில் அனுஷா மற்றும் குழந்தைகள் இருந்தனர். அப்போது மர்ம நபர் வீட்டில் நுழைந்து அனுஷா அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துள்ளார்.
அனுஷா திருடன் திருடன் என கூச்சலிட்டார். அப்போது செயினில் ஒரு பகுதி திருடன் கையில் சிக்கியது. திருடன் கையில் சிக்கிய 4 பவுன் செயினுடன் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து அனுஷா திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள்.


