ராமநாதபுரம், ஜுலை 07 –
ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் தமுமுக மமக நிர்வாகிகள் கூட்டம் பேரூர் தலைவர் காதர் தலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜிஃப்ரி மமக மாவட்ட துனை செயலாளர் கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தமுமுக செயலாளர் மைதீன் கிராத் ஓதி நிகழ்வை துவங்கி வைத்தார்.
மமக செயலாளர் பரக்கத் அலி, பொருளாளர் ஹம்மாது, துனை தலைவர் அலாவுதின் ரிஸ்வான், ஐபிபி அன்சாரி, சலிம் ரியாஸ், அப்துல்லா ஜலால், முஸ்தபா, யாசிர் இபுராம்ஷா, மாணவர் அணி நவ்பிக் மற்றும் தமுமுக மமக தொண்டி பேரூர் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தொண்டி பேரூராட்சியில் இந்து முஸ்லிம் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் சமுக நல்லிணக்கம் தொடர்ந்து கடைபிடிக்க தொண்டியில் ஐக்கிய ஜமாத் இந்து மத தர்ம பரிபாலன சபை தொடர்ந்து நல்லிணக்கம் தொடர பல்வேறு முயற்சியின் அடிப்படையில் தொண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் ஊர் பொது வேட்பாளரை ஆதரித்து வந்துள்ளது.
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சி அனைத்து சமூக மக்களின் நல்லிணக்கம் பேணுவதற்காக தொப்புள் கொடி உறவுகள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது எனவும் எஞ்சிய வார்டு களில் தமுமுக மமக பங்கேற்கும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொண்டியை மையமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும், எஸ் பி பட்டினம் முதல் காரங்காடு வரை கடற்கரை கிராமமாகும் மீனவர்கள் விவசாயிகள் அனைத்து சமூக மக்கள் வாழக்கூடிய பகுதி மக்களுடைய நலன் கருதி தொண்டியை தலைமையாக வைத்து தனித் தாலுகா அமைக்க வேண்டும், தொண்டி செய்யது முகம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சுற்றி சுற்று சுவர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொண்டி பேரூர் அனைத்து வார்டு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மமக செயலாளர் பரகத் அலி நன்றி கூறினார்.



