தருமபுரி, ஜூலை 04 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை வழியாக குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக பாலக்கோடு காவல்துறைனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பாலக்கோடு இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் சுங்கசாவடி பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமாக வந்த சொகுசு காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சுமார் 250 கிலோ அளவிற்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
குட்காவுடன் சுமார் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த டிரைவர் முத்துராமன் (31) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.



