தஞ்சாவூர், ஜூன் 13 –
தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டைச்சுவரை சுற்றி புதிதாக அமைக்கப்பட்ட நிரந்தர மின் விளக்குக்கு அமைப்புகளை மாவட்ட கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரிய கோயில் முன்புறம் உள்ள அகழி துவார் வாரப்பட்டு தற்போது மின் விளக்குகள் அமைக் கப்பட்டன. இந்த மின்னொழியில் கோட்டை சுவர் பொழிவாக இருந்த தற்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து இப்பகுதியில் அழகை மெருகேற்றும் வகையில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் நிரந்தர மான மின் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளன. இவற்றை தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி அதிகாரப் பூர்வமாக தொடங்கி வைத்தார்
நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் நித்யா, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கார்த்திகேயன், தஞ்சாவூர் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மனோகர், வட்டாட்சியர் சிவக்குமார், சுற்றுலா அலுவலர் வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



