சுசீந்திரம், ஜுலை 2 –
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக 12 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன அந்த உண்டியல்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவது வழக்கம்.
அதுபோல நேற்று முன்தினம் காலை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி தலைமையில் துணை ஆணையர் கவிதா, ஆய்வாளர் சுபா, கண்காணிப்பாளர் ஜெயசுதா, கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், சுய உதவி குழு பெண்கள் 12 உண்டியல்களும் திறந்து எண்ணினர். உண்டில் காணிக்கை வருவாயாக 25 லட்சத்தி 65 ஆயிரத்து 712 ரூபாயும் 2 கிராம் தங்கமும் 38 கிராம் வெள்ளியும் வெளிநாட்டு நாணயங்களும் கிடைத்துள்ளது.


