நாகர்கோவில், ஜுன் 25 –
திருக்குறளை தேசிய இலக்கிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற முதலமைச்சர் விஜயின் பேச்சுக்கு அகில இந்திய தமிழர் கழகம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளதாவது: திருக்குறளை தேசிய இலக்கிய நூலாக அறிவிக்க வேண்டுமென்று டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு, பிரதமரிடம் நேரில் கோரிக்கை வைத்திருந்தார் தமிழக முதலமைச்சர் விஜய்.
அதை தொடர்ந்து சட்டமன்றத்தில் நடந்திய உரையின் போதும், திருக்குறளை தேசிய இலக்கிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற தனது வெளிபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார் . பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் எனும் திருவள்ளுவரின் தத்துவத்தை பின்பற்றி தமிழர் நெஞ்சங்களில் இடம் பிடித்த தவெக கட்சி தலைவர் முதலமைச்சர் விஜய்க்கு தமிழ் அறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் நாமும் முதலமைச்சருக்கு பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



