சுசீந்திரம், ஜன. 20 –
பறக்கை அருகே உள்ள மதுசூதனபுரத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (39). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சம்பவத்தன்று கோடீஸ்வரன் வீட்டின் பின்பக்கம் உள்ள கழிவறையில் வழுக்கி கீழே விழுந்துள்ளார். இதில் காயமடைந்த கோடீஸ்வரனை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கோடீஸ்வரன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது சகோதரர் ராஜேஷ் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


