கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு செண்பக ராமன்புதூர்,ஆரல்வாய் மொழி , கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் ஆடுகளை திருடிய கும்பலை போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று கோட்டார் பகுதியை சேர்ந்த அப்துல் சமத்(25) இருளப்புரம் பகுதியை சேர்ந்த முகமது சோயின்(19)ஆகிய இரண்டு வாலிபர்களை ஆரல்வாய்மொழி காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களை விசாரித்த போது பல்வேறு இடங்களில் இருந்து ஆடு திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 20 க்ற்கும் மேற்பட்ட ஆடுகளை மீட்டனர். மீட்கப்பட்ட ஆடுகள் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது.



