திருப்பூர், ஜூன் 22 –
காங்கேயம் சாலை நல்லி கவுண்டன் புதூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் 52வது பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். பல் சமய நட்புறவு கழகத்தின் சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நல்லூர் பகுதி செயலாளர் ஷெரீப் முன்னலையில் 48வது வார்டு செயலாளர் கார்த்திக் இனிப்புகளை வழங்கி பொதுமக்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.
பல் சமய நட்புறவு கழகத்தின்தலைவர் ஷாஜகான் தலைமையில், பொறுப்பாளர் ஹக்கீம் மாவட்ட இளைஞரணி தலைவர் உசேன் மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது மாவட்ட துணைச் செயலாளர் அர்ஷத் அலி ஒன்றிய தலைவர் சந்திரன் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மாநகர துணைச் செயலாளர் சர்புதீன்,மற்றும் மாவட்ட மகளிர் அணி தலைவி மேகலா மாவட்ட மகளிர் அணி செயலாளர் சித்ரா மாவட்ட மகளிர் அணி பொருளாளர் அகன்ஷா மற்றும் மாநகர மாணவ அணி செயலாளர் ஹர்ஷத் முகமத்ரியாஸ் ஹஃபில் ஷாருக் அகமதுகைப், அப்துல் ரஹ்மான் நபீஸ் சுஹைல் அஜ்மல் ரியாஸ், உமர் இர்பாண், தண்வீர், சதாம், ஆசில், கவிண் ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவில் சிறப்பித்தார்கள்.



