By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே வீடு புகுந்து மீனவர் குத்தி கொலை: உறவினர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே வீடு புகுந்து மீனவர் குத்தி கொலை: உறவினர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே வீடு புகுந்து மீனவர் குத்தி கொலை: உறவினர் கைது

Last updated: June 20, 2026 7:42 pm
June 20, 2026
3 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 20 –

குளச்சல் அருகே கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (51). மீனவர். இவரது மனைவி ஜாஸ்மின் லலிதா (46). இவர்களுக்கு 24 வருடங்கள் முன்பு திருமணம் நடந்தது. 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனையில் ராஜன் தனது மனைவி ஜாஸ்மின் லலிதாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தனது கணவரிடம் கோபித்து கொண்டு குளச்சல் கொட்டில் பாடு பகுதியில் உள்ள தனது சகோதரி மேரி கலா (53) என்பவரின் வீட்டுக்கு சென்று தங்கி இருந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ராஜன் கொட்டில்பாடு சென்று தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறி தகராறு செய்துள்ளார். ஆனால் கணவகுடன் செல்ல ஜாஸ்மின் மறுத்து விட்டார். அப்போது மேரி கலாவுக்கும் ராஜனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மேரி கலாவின் கணவர் புஷ்பநாதன் இருவரையும் சமாதானம் செய்து ராஜனுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார். இதனால் புஷ்பநாதன் மீது ராஜன் ஆத்திரமடைந்தார். தனது மனைவி தன்னுடன் வர மறுப்பதற்கு புஷ்பநாதனும் அவரது மனைவியும் தான் காரணம் என எண்ணினார்.

இந்த நிலையில் நேற்று ஜாஸ்மின் லலிதா வெளியூரில் நர்சிங் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக நாகர்கோவில் பஸ் நிலையம் சென்று இருந்தார். அவருடன் மேரி கலாவும் சென்றிருந்தார். புஷ்பநாதன் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் ராஜன் அங்கு சென்று தனது மனைவி எங்கே என புஷ்பநாதனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் மகளை அழைத்து வருவதற்காக சென்று உள்ளார் என தெரிவித்தார். இதில் மாறி மாறி இருவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திடீரென ஆத்திரமடைந்த ராஜன் எல்லா பிரச்சனைக்கும் நீதான் காரணம் எனக் கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் புஷ்பநாதனை இடது பக்க கழுத்து மற்றும் மார்பு பகுதியில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் புஷ்பநாதன் சரிந்தார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ராஜன் தப்பி ஓட்டம் பிடித்தார். படுங்காயம் அடைந்த புஷ்பநாதனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குளச்சல் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் புஷ்பநாதன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி புஷ்பநாதன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மேரி கலா அளித்த புகாரின் பேரில் ராஜன் மீது வழக்கு பதிவு செய்தனர். இன்று காலை ராஜன் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
மோசடி விழிப்புணர்வு: யூடியூப் ரீல்ஸ் நடிகரை
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை: வேட்பாளர்கள், முகவர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி துறையில் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.20 லட்சம் லஞ்சம் வாங்கிய மூவர் கைது
செம்மண் கடத்திய டெம்போ-ஜே.சி.பி. பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

படந்தாலுமூட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அரசுக்கு சொந்தமான மரத்தை வெட்டி எடுத்து சென்ற நபர்கள்

November 3, 2025
80 Views
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சவேரியார் புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தமிழர் மருத்துவமே தலைசிறந்த மருத்துவம்
வேலூரில் ராஜ் அண்ட் ராஜ் என்டர்பிரைசஸ் BE-
ஏழை மக்களுக்கான ” பசியில்லா உலகம் ” திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account