தஞ்சாவூர் ஜுன் 19
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார். மகாமக திருவிழாவையொட்டி மகாமக குளத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், மாநகராட்சி மூலம் செயல்படுத்த வேண்டிய கட்டுமான பணிகள், மின் வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பணிகள் குறித்து மாநகராட்சி அலுவலர்களுடன் கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்.
சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை யின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்தும் கடையின் மூலம் பயன் பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும், மின்னணு விற்பனை முனைய கருவி செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தார்.
ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் குழந்தைகள் நேய பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 34.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்ற 2 வகுப்பறைகளை பார்வையிட்ட கலெக்டர் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு செய்தபோது குடிநீர், சாலை வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் முழுமையாக பயன்பெறும் வகையில் விரைவாக செயல்படுத்துமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
செம்பியவரம்பல் ஊராட்சியில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மினி ஸ்டேடியம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, உயர்தரத்தின் பணிகளை விரைந்து முடித்து, இளைஞர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து 15-வது மத்திய நிதி குழு பொது சுகாதார மானியத் திட்டத்தின் கீழ் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அளவு கட்டிடமான பணிகளை பார்வையிட்டார். பின்னர் கும்பகோணம் சமூக நீதி கல்லூரி மாணவிகள் விடுதிகளை பார்வையிட்டு, அங்கு தங்கு உள்ள மாணவி களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் திருமலை, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரகுமார், உதவி கலெக்டர் பயிற்சி சுபாஷ் கார்த்திக், தாசில்தார் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமானுல்லா, நந்தினி ஒன்றிய பொறியாளர் தமிழ்ச்செல்வன், திருநாவுக்கரசு மற்றும் பலர் உடன் இருந்தனர்.



