By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கோயில்களில் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய விநாயகர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோயில்களில் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய விநாயகர்
கனஂனியாகுமரிமாவட்டம்

கோயில்களில் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய விநாயகர்

Last updated: September 9, 2024 3:15 pm
September 9, 2024
59 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 8 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7ம் தேதியான நேற்று தொடங்கியதை ஒட்டி  குமரி மாவட்டத்தில்  அனைத்து கோயில்களிலும் காலை சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. முழு முதற் கடவுளான விநாயகருக்கு பிடித்த அவல், பொரி, கடலை, மோதகம், கொழுக்கட்டை, பாயாசம் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது .  இந்து முன்னணி, பாரதிய ஜனதா, இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு .நாளை முதல் ஒரு வாரம் பூஜை செய்யப்படும் விநாயகர் சிலைகள் வரும் 13, 14, 15ம்தேதிகளில் நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, சொத்தவிளை, சங்குதுறை, திற்பரப்பு, மிடாலம், தேங்காப்பட்டணம், மண்டைக்காடு, பள்ளிக்கொண்டான் அணை உள்ளிட்ட இடங்களில் சிலைகள் கரைக்கப்படும். வரும் 13ம்தேதி சிவசேனா சார்பில் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. 14ம்தேதி இந்து மகா சபா சார்பில் சிலைகள் கரைக்கப்படும். 15ம்தேதி இந்து முன்னணி சார்பில் மாவட்டம் முழுவதும் வைக்கப்படும் சிலைகள் கரைக்கப்படும். விநாயகர் சிலைகள் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 10 அடிக்கு மேல் சிலைகள் இருக்க கூடாது. கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடங்களில் தான் சிலைகள் வைக்க வேண்டும். முறையாக அனுமதி பெற்ற பின்னரே சிலைகள் வைக்கப்பட வேண்டும்.புதிய வழித்தடம் வழியாக ஊர்வலம் செல்ல அனுமதியில்லை. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடம் வழியாகவே ஊர்வலம் செல்ல வேண்டும். ஊர்வலத்தில் பிறர் மனதை புண்படுத்தும் வகையிலான கோஷங்கள் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளை காவல்துறை , மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி நாகர்கோவில், தக்கலையில் இரு தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. ஊர்வல பாதைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஊர்வல பாதைகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைகளுடன் அவை இணைக்கப்பட்டுள்ளது. எனவே

ஊர்வல நிகழ்ச்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் கண்காணிக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே நேற்று  விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்.  சிலை வைக்கும் இடங்களில் சிலை கமிட்டி சார்பில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு ஆட்கள் இருக்க வேண்டும் என போலீசார் கூறி உள்ளனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்றும்,  இன்றும் விடுமுறை என்பதால் மாவட்டம் முழுவதும் சுமார் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அமெரிக்கா அதிபர் டிரம்ப் வெனிசுலா அதிபர் மதுரோவை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை கண்டித்து நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வலுதூக்கும் போட்டி வெற்றி பெற்ற வீரர்களுக்கு கோப்பை
புதிய தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் 364 கோடி
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்.
தக்கலை அருகே ஆற்றுக்குள் பாய்ந்த சரக்கு ஆட்டோ: டிரைவர் படுகாயம்: ஆஸ்பத்திரியில் சேர்த்த கலெக்டருக்கு குவியும் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

May 15, 2024
114 Views
கே.ஏ.எஸ்.மணிமாறன் கார் விபத்தில் உயிரிழந்தார்
காளிகேசம் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா புகழாரம்
புதுக்கடை அருகே பட்டா நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட எதிர்ப்பு; போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account