நாகர்கோவில், நவ. 3 –
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடக்கு மாவட்டம் மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமநாதிச்சன்புதூர் பகுதியில் மலை அடிவாரத்தில் ஒரு தனியார் கிடங்கில் பெருந்தீ விபத்து இரவில் ஏற்ப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் மருங்கூர் பேரூராட்சி பொறுப்பாளர்களுடன் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டார்.
கிடங்கில் பல காலமாக மருத்துவ கழிவுகள் மற்றும் நெகிழி கழிவுகள் கொட்டி வைத்து உள்ளனர். அந்த இடத்தின் உரிமையாளர்கள் வேண்டுமென்றே இந்த குப்பைகளை எரிய விட்டு உள்ளனர். இயற்கையான மலையடிவார பகுதியான இந்த இடத்தில் இச்சம்பவம் பெரும் சுற்று சூழல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் சம்பவ இடத்தில் இருந்த பேரூர் செயல் அலுவலர், மற்றும் பேரூர் தலைவர், நாம் தமிழர் வார்ட் கவுன்சிலர், காவல்துறை உட்பட அனைவரிடமும் இந்த சமூக விரோத செயலுக்கான உரிய நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்கும் படி கேட்டு கொண்டனர்.
மேலும் துறை சார்ந்த நடவடிக்கைகான முன்னெடுப்புகளை எடுத்தது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியினரின் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து துரித நடவடிக்கை மேற்கொண்டது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



