தஞ்சாவூர், ஜூன் 15 –
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உலகப் புரட்சியின் அடையாளமாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும் விளங்கிய புரட்சியாளர் சேகுவேராவின் 98 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கட்சியின் மாநகர செயலாளர் வடிவேலன் தலைமை வகித்தார். சேகுவேரா உருவ படத்துக்கு செவ்வணக்க மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலர் சின்னை. பாண்டியன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில பொருளாளர் சந்துரு சிறப்புரையாற்றினார்.
விழாவில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், அருளரசன், சரவணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் குருசாமி, வசந்தி, மாநகர உறுப்பினர்கள் சத்தியநாதன், ராஜன், கோஸ் கனி, அர்ஜுன், தர்மா ராஜன், சி ஐ டி யு மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



