சென்னை, மே 1 –
சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அதிகாரியாக விஜய் ஆனந்த் பொறுப்பேற்கிறார். கடந்த 15 ஆண்டுகளாக தலைமை பொறுப்பில் இருந்த காமகோடி சிட்டியூனியன் வங்கியின் அறக்கட்டளையின் தலைமை பொறுப்பை மே 1, 2026 அன்று ஏற்கிறார்.
28 ஆண்டுகால வங்கித் துறை அனுபவம் கொண்ட விஜய் ஆனந்த், 2023ம் ஆண்டில் இவ்வங்கியின் செயல் தலைவராக இணைந்தார். பின்னர் 2024-இல் செயல் இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். சிட்டியூனியன் வங்கியில் இணைவதற்கு முன்பு, இவர் ஆர்பிஎல் வங்கியில் சில்லறைச் சொத்துக்கள் பிரிவின் வணிகம் மற்றும் வசூல் பிரிவுத் தலைவராக பணியாற்றியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்கவுள்ள விஜய் ஆனந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:-
வங்கியில் கடைபிடிக்கப்பட்டுவரும் நடைமுறைகளில் மாற்றமின்றி தொடர்ந்து செயல்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பிணையம் சார்ந்த கடன் வழங்கும் பிரிவுகளில் வங்கி தனது நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் அதே வேளையில், ‘நம்பிக்கை’, ‘எளிமையான வங்கிச் சேவைகள்’ மற்றும் ‘சிறந்த வாடிக்கையாளர் சேவை’ ஆகியவையே வங்கியின் முதன்மையான முன்னுரிமைகளாக தொடர்ந்து திகழும்” என்று அவர் தெரிவித்தார்.



