மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டு பகுதிகளில் பாஜக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்குவதுதொடர்பான பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. பாஜக மாவட்ட துணைத்தலைவர் மோடி.கண்ணன் தலைமை வகித்தார். மகளிரணி சித்ரா முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் நாஞ்சில்பாலு, தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நகராட்சி 36 வார்டுகளிலும் வார்டிற்கு குறைந்தது 200 புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறைகள் குறித்து விளக்கி பேசினர். இதில் செல்வம், விஜயஜி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



