தருமபுரி, ஜூன் 10 –
தருமபுரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தருமபுரி நகர காவல் நிலையம் மற்றும் அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், சுமார் 645 கிலோ எடை கொண்ட தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக 5 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



