திருச்சி, ஜூன் 6 –
திருச்சி மாவட்டம் முசிறி பேருந்து நிலையம் அருகே 2022ம் ஆண்டு அரசு பேருந்து மோதி உயிரிழந்த நவீன் குமார் மற்றும் அவரது தாய் சரசு குடும்பத்திற்கு 54 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீண்ட நாட்களாகியும் இழப்பீடு வழங்கப்படாததால், இன்று முசிறி பேருந்து நிலையத்தில் இரண்டு அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



