பெரம்பலூர், ஜூன் 6 –
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் சட்டவிரோதமாக மது விற்ற ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தவெக பிரமுகர் உமேஷ் (36) என்பவரைத் தனிப்படை போலீஸார் கைது செய்து, 40 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். டாஸ்மாக் கடையில் மது வாங்கி கூடுதல் விலைக்கு விற்றது விசாரணையில் தெரிந்தது. இதற்கிடையே, உமேஷைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி தவெக மாவட்டத் தலைமை உத்தரவிட்டுள்ளது.



