மார்த்தாண்டம், ஜூன் 5 –
அருமனை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அருமனை போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
காவூர் கோணம் பகுதியில் அருமனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுஜின் தலைமையிலான போலீசார் வாகன சூழ்நிலையில் ஈடுபட்டு இருந்தபோது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த பைக்கில் வெள்ளை சாக்கு பை ஒன்று காணப்பட்டது.
சாக்கு பையை திறந்து பார்த்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட 5 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது. பின்னர் பைக் ஓட்டிட்டு வந்த காரோடு, நம்பச்சான்விளை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அனீஸ் (32) என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரது வீட்டில் சோதனை செய்தபோது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 65 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து அனிஷை கைது செய்தனர்.



