தருமபுரி, மே 30 –
தருமபுரியில் மாநில சட்ட தூண்கள் அறக்கட்டளையின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் எஸ். குணசேகரன் தலைமையில் தருமபுரி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் சட்ட தூண்கள் அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டு வரும் பணிகளை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
இதில் அறங்காவலர்கள் முத்து, அருள், குமரவேல், மாநிலச் செயலாளர் மணி, மாநில பொருளாளர் காவேரி, தருமபுரி மாவட்ட தலைவர் பி.கே. சிவா, மாவட்ட செயலாளர் நாகராஜ், இளைஞர் அணி செயலாளர் கணேஷ், விவசாய அணி தலைவர் முனிராஜ், துணைச் செயலாளர் ரோஹித் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



