திருப்பூர் மார்ச்: 29 மாநகராட்சி பட்ஜெட் வெளியீடு நிகழ்ச்சி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிதி குழு தலைவர் கோமதி 2025 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வெளியிட்டார். இதற்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி
சிட்டி வெங்கடாசலம், தம்பி கோவிந்தராஜ், இல. பத்மநாதன், கோவிந்தசாமி மாமன்ற உறுப்பினர்கள்.
இதில் 2025 26 பட்ஜெட்டில் ரூ.1,522 கோடியே 7 லட்சம் வருவாய். செலவினம் 1,517 கோடியே 97 லட்சம். உபரி ரூ.4 கோடியே 10 லட்சம் என வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் பட்ஜெட் சிறப்பம்சங்கள் குறித்து மேயர் தினேஷ்குமார் கூறுகையில் . குடிநீர் மேம்பாட்டு திட்டம், பாதாள சாக்கடை திட்டப்பணி, திடக்கழிவு மேலாண்மை, சாலை மேம்பாடு, புதிய மாநகராட்சி கட்டிடம், மழைநீர் வடிகால், சோலார் மின் திட்டம், தெரு நாய்கள் கட்டுப்படுத்துதல் பேருந்து நிலையத்தில் வை-பை வசதி என புதிய திட்டங்கள் குறித்து மண்டல தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறினர்.



