திருச்சி, மே 25 –
திருச்சி மாவட்ட குழந்தைகள் உதவி மையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்கள் ஒரு வருட தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், https//trichyrapalli.nic.in இணையதளத்தில் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, வரும் ஜூன் 6ம் தேதிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.



