கமுதி . இராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.பாப்பாங்குளம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் கண்ணன்(51). இவர் நேற்று பள்ளிதிறப்பை முன்னிட்டு வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் கே. பாப்பாங்குளம் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது பாப்பாங்குளம் ஓடை அருகே மர்ம நபர்கள் இடை மறித்து அறிவாளால் தலைவேறு உடம்புவேறாக வெட்டி படுகொலை செய்து தப்பிவிட்டனர் இது குறித்து கமுதி டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றார். முதல்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர். இது மாதிரி கூலிபடையை வைத்து கொலைசெய்யும் சம்பவம் சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு நடைபெற்றது அது தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது ஆகவே இந்த ரவுடிசத்தை காவல்துறை இரும்புகரம் கொண்டு ஒடுக்கி மீண்டும் இதுபோல ஒரு சம்பவம் நடைபெறாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கையை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் எடுக்கவேண்டும் என கமுதி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கொலையான ஆசிரியர் கண்ணனின் மனைவி கமுதி தாலுகா ஆபிசில் சர்வேயராக பணிபுரிந்து வருகின்றார்



