நாகர்கோவில், மே 16 –
நாகர்கோவில் மாநகராட்சி 43வது வார்டுக்கு உட்பட்ட மறவன் குடியிருப்பு பகுதியில் உள்ள சிவன் காலனி, விவேகானந்தா தெரு, ஸுரி கார்டன் நகர் போன்ற பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைத்து தர வேண்டும் என 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேயரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து பொறுப்பு மேயர் மேரி பிரின்சி லதா கான்கிரீட் தளம் அமைத்து தர கேட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் விரைவில் காங்கிரீட் தளம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து
மேல மறவன் குடியிருப்பு பகுதியில் அங்கன்வாடி மையம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார். மேலும் அல்போன்சா தெரு பகுதிகளில் ஆய்வு செய்த மேயர் மழைநீர் வடிகால், கழிவுநீர் ஓடைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் விஜயன் உதவி பொறியாளர் பிருந்தா, நிஷ்மா, சுகாதார ஆய்வாளர் தேன்மொழி, சுகாதார அலுவலர் ராஜா மற்றும் தொழில் நுட்ப உதவியாளர் நிஷ்மா, மாவட்ட அமைப்புசாரா ஒட்டுரணி அமைப்பாளர் அந்தோனி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.



