தஞ்சாவூர், மே 9 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டில் வளாக கல்வி வாயிலாக நடத்தப்படும் ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுகலை பட்ட படிப்பு, முதுகலை, முதுஅறிவியல், முதுநிலை பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர்களுக்கு சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்பட்டன.
பதிவாளர் (பொறுப்பு) பன்னீர் செல்வம் விண்ணப்ப படிவத்தை வழங்கி, தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சிவரஞ்சனி விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டார். அப்போது பொறியாளர் விஜயன், தனுஷ்கோடி, கோபிநாத், சேர்க்கைப் பிரிவு கண்காணிப்பாளர் ராஜ ராஜன், ராமகிருஷ்ணன், உதவியாளர் ராஜேந்திரன் இளநிலை உதவியாளர் அமுதா, கவி, கயல்விழி, அலுவலக உதவியாளர்கள் பிலோமின் ராஜ், மணிகண்டன், சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.



