திருச்சி, மே 9 –
மணப்பாறை அருகே அமையபுரம் கிராமம், கூடத்திப்பட்டியில் SS-6 மின்மாற்றியில் இருந்து நேற்று (மே 8) காலை 10:00 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாவு மில் உரிமையாளர் ஆரோக்கியம் அளித்த தகவலின் பேரில் மின்சார வாரிய ஊழியர் ரவிவர்மன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, மின்மாற்றி பெட்டி திறந்து கிடந்ததும், அதில் இருந்த சுமார் 90 கிலோ காப்பர் காயில்கள் திருடப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து வையம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



