திருச்சி, மே 2 –
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலைய போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: துவாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டை காமாட்சி அம்மன் நகர் எட்டாவது தெருவை சேர்ந்த சுரேஷ் மனைவி சாந்தி என்பவர் தனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் முதலாவது விஷாலி 19 வயது இரண்டாவது சூர்யா 17 வயது என்றும் அதில் விஷாலி கோயம்புத்தூரில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் பயோ டெக் படித்து வருவதாகவும் இவர்கள் திருப்பூரில் நாராயணபுரத்தில் ஒரே அப்பார்ட்மெண்டில் குடியிருந்தபோது அதே அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வந்த ராதாகிருஷ்ணன் மகன் அழகு ராஜா என்பவர் உடன் விஷாலி என்ற மூத்த பெண் காதலித்து வந்ததாகவும் இது தெரிந்தவுடன் அங்கிருந்து தனது மூத்த மகளின் படிப்பை நிறுத்திவிட்டு வாழவந்தான் கோட்டை வந்து தன் மகளின் வீட்டிலே வைத்து பார்த்து வந்ததாகவும் தற்பொழுது 18 வயது பூர்த்தி அடைந்த பின்பு மேற்படி அழகுராஜா என்பவர் துவாக்குடி பகுதிக்கு வந்து விஷாலியை அழைத்துச் சென்று திருப்பூர் பல்லடத்தில் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தன் மகளை கண்டுபிடித்து தருமாறு தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் துவாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் மேற்படி இருவரும் பல்லடத்தில் அழகுராஜா வீட்டில் இருப்பது தெரியவந்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்க விஷாலி தன்னுடைய கணவருடன் தான் செல்வேன் என தெரிவிக்க அவர்கள் குடும்பத்துடன் காணாமல் போன பின் கண்டுபிடித்து ஒப்படைக்கப்பட்டார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



