தஞ்சாவூர், மே 1 –
உலகளாவிய போட்டி தான் மாணவர்களுக்கு பெரிய சவால். எனவே அதனை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழக விழாவில் கவிஞர் வைரமுத்து கூறினார்.
தஞ்சாவூரை அடுத்துள்ள வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 136 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அன்புராஜ், துணைவேந்தர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி கியூபா அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு ‘புரட்சி கவிஞரின் புதிய உலகம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு காலத்தில் கல்வி கற்றவர்கள் ஒரு வர்க்கமாகவும், கல்வி கல்லாதவர்கள் மற்றொரு வர்க்கமாகும் பிரிக்கப்பட்டனர். அந்த பேதத்தை ஒழிக்க தான் பெரியார் கல்விக்கும், பெண்கள் கல்விக்கும், சமத்துவத்திற்கும் போராடினார். அவரது சுயமரியாதை கனவில் நீட்சி தான் இன்றைய பல்கலைக்கழகம்
இது சாதாரண கல்விக்கூடம் அல்ல, உலக தரத்தில் அமைந்துள்ள அறிவுக்கூடம்.
மாணவர்களாகிய நீங்கள் உள்ளூர் போட்டியாளர்களுடன் மட்டுமல்ல, உலக அளவிலான போட்டியாளர்களுடன் போட்டியிட வேண்டியவர்கள் தஞ்சாவூரில் படிக்கும் மாணவனுக்கு போட்டி வாஷிங்டனில் இருக்கலாம். இங்கு படிக்கும் மாணவிகளுக்கு போட்டி மாஸ்கோவில் இருக்கலாம்.
நீங்கள் வெற்றி பெற்றால் பெரியார் போன்ற சமூக சீர்திருத்த வாதிகளின் கனவுகள் நனைவாகு ம் கல்வி என்பது உண்மையான கோவில். கோவில்கள் பல இருந்தாலும், உண்மையான முன்னேற்றத்தை அளிப்பது கல்விக்கூடங்களும், பல்கலைக் கழகங்களுமே நாட்டில் ஆயிரக் கணக்கான பல்கலைக்கழகங்க ளும், கோடிக்கணக்கான மாணவர் களும் இருந்தாலும் பட்டம் பெற்ற வர்களில் சுமார் 56 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. மீதமுள்ளவர்கள் சவால்களை எதிர்கொள்ள கொல்கிறார்கள்.
எனவே மாணவர்கள் தங்களை பல்திறமையுடன் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பட்டம் என்பது ‘ஒரு விசிட்டிங் கார்டு’ மாதிரி மட்டுமே அதற்கு மேலாக தொழிற் கல்வி, கூடுதல் திறன்கள் ஆகியவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். உலகின் எதிர்பார்ப்புக்கும் தகுந்த திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் வறுமை, குடும்ப சூழல் அல்ல, உலகளாவிய போட்டிதான், உங்களுக்கு பெரிய சவால் அதனை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பல்கலைக்கழகத்தின் நடைபெற்ற பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வைரமுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளை மாணவி யாழினி அனு ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் பேராசிரியர் தங்கமணி நன்றி கூறினார்.



