திருச்சி, ஜூன் 3 –
திருச்சி மாவட்டம் முசிறி அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (31), மனைவி கவிதா (25), மாமனார் முருகேசன் (50) மற்றும் மைத்துனர் கார்த்திக் ஆகிய நால்வர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு வயது குழந்தை உள்பட இருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



