புதுக்கடை, மே 16 –
புதுக்கடை அருகே உள்ள வெள்ளையம்பலம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் மனைவி சுவேதா (25). இவரது தாய் தந்தையரின் வீடு பைங்குளம் பகுதியில் உள்ளது. இவர் தாய் தந்தையரின் வீட்டிற்கு செல்லும் போது வீட்டருகே உள்ள சசி (69) என்பவர் சுவேதாவையும் அவரது தாய் தந்தையரையும் கெட்ட வார்த்தைகள் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சுவேதா மீண்டும் தனது தாய் தந்தையரின் வீட்டில் நிற்கும்போது சசி அவரைப் பார்த்து கெட்ட வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சுவேதா புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


