திருப்பத்தூர், ஜூன் 1 –
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் கு.ரவிகுமார் பெற்றுக்கொண்டார்கள்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர் உமாமகேஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பூஷணகுமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள் (தெற்கு) மகாதேவன், (வடக்கு) முருகன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முருகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தணிகாசலம், உதவி ஆணையர் (கலால்) வேடியப்பன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரைமணாளன், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் செந்தில்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.



