வேலூர், ஜூலை 14 –
வேலூர் மாவட்டம் கணியம்பாடி வட்டாரம் கம்மசமுத்திரம் ஊராட்சியில் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலைய கட்டிடத்தை தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் சென்னையில் காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து துணைசுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பிரமணியன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சுகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இதில் மாவட்ட சுகாதார அலுவலர் விஜய் சந்திரன், தேசிய சுகாதார இயக்க உதவி திட்ட அலுவலர் மரு.ஆதித்யன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், மாவட்ட சுகாதார நல கல்வியாளர் கங்காதரன், சுகாதார அலுவலரின் நேர்முக உதவியாளர் இளங்கோ, கம்மவான்பேட்டை மருத்துவ அலுவலர் மரு.துரை, வட்டார மருத்துவ அலுவலர் மரு.அனிதா, சுகாதார ஆய்வாளர் ஏழுமலை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், துணைத்தலைவர் அமுதாகணேஷ், வார்டு உறுப்பினர் தீபக் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்



