திருச்சி, மே 01 –
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பெட்டவாய்த்தலை பகுதியில் செயல்பட்டு வந்த தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பணிமனை அலுவலகத்தை மர்ம நபர்கள் இன்று அதிகாலை தீயிட்டு கொளுத்தி முற்றிலும் அழித்துள்ளனர். மேலும், அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் கிழித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழக வெற்றி கழக ஒன்றிய செயலாளர் தலைமையில் பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என தவெகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



