திருச்சி, ஏப். 30 –
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் மொத்தம் 14 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதில் ஐசியூ பிரிவில் நான்கு படுக்கைகள், ரெட் ஜோனில் இரண்டு படுக்கைகள் மற்றும் வார்டுகளில் எட்டு படுக்கைகள் என வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பில் அமைக்கப்பட்டுள்ளது



