கிருஷ்ணகிரி,பிப்.9- டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதனை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வட்டாரங்கள் , கிளை பகுதிகளில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமையில் ரவுண்டானா பகுதியில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பேருஹள்ளி பகுதியில் மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்க பட்டது. நாடு முழுவதும் பாஜகவினர் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் எதிர் வரும் 2026 ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என்று கோசங்களை எழுப்பினர். நிகழ்ச்சியை முன்னால் மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், சங்கர், விமலா, பழனி, மன்னன் சிவா, சீனிவாசன், பிரதிம, தமிழ்செல்வன், ஸ்ரீராமுலு உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



