தருமபுரி, மே 26 –
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியில் காவல்துறையினர் ரோத்து பணியில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபர் காவல்துறையினரை பார்த்தவுடன் தப்பியோட முயன்றார். காவல்துறையினர் அவரை விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த யோகேஷ் (18) என்பதும் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவர் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் மொரப்பூர் காவல்துறையினர் அம்பாலப்பட்டியை சேர்ந்த சசிகுமார் (22) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து காவல்துறையினர் கஞ்சா, மோட்டார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். பொம்மிடி காவல்துறையினர் ராமமூர்த்தி நகர் சோதனை சாவடி அருகில் ரோத்து சென்றனர். அப்போது ரயில்வே பாலம் அருகில் மது பதுக்கி விற்ற முருகன் (25) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 54 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


