மார்த்தாண்டம், ஏப். 29 –
குழித்துறை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ஜீன் தாமஸ் (32). இவரது மனைவி ஷெரினா (30). இவர்கள் நேற்று பைக்கில் இரவிபுதூர் கடையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது கல்லுத்தொட்டி என்ற இடத்தில் செல்லும்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் பைக்கை ஓட்டிய ஜீன்தாமஸ் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஷெரினா மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் என்ற பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் நம்பூதிரி மகன் பிரமோத் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


