திருப்பூர், மே 25 –
ஜனநாயக சமநீதி மக்கள் கழகம் சார்பில் திருப்பூரில் ஆலோசனைக் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை, மக்கள் நலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக சுரேந்தர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட செயலாளராக மைதீன் ஆகியோரின் பொறுப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கூட்டத்தின் முடிவில் கழக வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி எடுத்துக்கொண்டனர்.



