திருச்சி, ஏப். 27 –
துறையூர் அருகே உள்ள செல்லப்பாளையம் ஏரியில் நேற்று முன்தினம் மதியம் திடீரென கருவேல மரங்களுக்கு அருகில் இருந்த முட்செடிகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த தீ மளமளவென பரவி சுமார் 100க்கும் மேற்பட்ட கருவேல மரங்களை அழித்தது. சம்பவ இடத்திற்கு உப்பிலியபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் துரைசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



