நாகர்கோவில், ஏப். 27 –
நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் ராமன்புதூர் சந்திப்பு பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் பைக்கில் வந்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள்.
இதை அடுத்து அவர்களிடம் நடத்திய சோதனையில் 40 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து பைக் கஞ்சா முதலியவற்றை பறிமுதல் செய்து பிடிபட்ட இரண்டு பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் நாகர்கோவில் தட்டான் விளையை சேர்ந்த அபினேஷ் (21), வெள்ளமடம் நிகேஷ் குமார் (21) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் பெயிண்டர்கள் ஆவார்கள். இருவரையும் கைது செய்து போலீசார் ஜாமீனில் விடுவித்தனர். இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பாக அவர்களின் செல்போன் அழைப்புகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர்.


